தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'மதராசபட்டினம்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்த லண்டன் நடிகை எமி ஜாக்சன், அதன் பிறகு 'தாண்டவம், தெறி, 2.0' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக 'மிஷன் சாட்டர்-1' என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணத்திற்கு முன்பே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த எமி ஜாக்சன், பின்னர் அவரை பிரிந்து விட்டார். அதன் பிறகு எட் வெஸ்ட் விக் என்ற ஹாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறப்புக்கு பிறகு ஓராண்டு காலமாக நடிக்காமல் இருந்து வந்த எமி ஜாக்சன் தற்போது மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார். இது குறித்து அவர் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ஒரு வருடத்திற்கு பிறகு மகன்களைப் பிரிந்து மீண்டும் வேலைக்கு செல்ல போகிறேன். இது மிகவும் கடினமாக உள்ளது. எப்போது வீடு திரும்பி மகன்களை பார்ப்பேனோ என்ற ஏக்கம் உள்ளது. இப்படி என்னைப் போலவே என்னை பிரியும் கஷ்டம் என் மகன்களுக்கும்தான் இருக்கும். அதை நினைக்கும் போது சற்று ஆறுதலாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.