துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜா ராணி சீரியல் நடிகையான அர்ச்சனா இப்போது சினிமாவில் முழு கவனம் செலுத்துகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "கதை நன்றாக இருந்தால் சினிமா, ஓடிடி இரண்டிலும் நடிப்பேன். மாஸாக நடிப்பதை விட அர்த்தமுள்ள அதேசமயம் பார்வையாளர்களுடன் கனெக்ட் செய்யும்படியான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். சீனியர் நடிகர்கள் ஷபானா ஆஷ்மி, ஸ்மிதா படில், அர்ச்சனா(வீடு), ஷோபனா மற்றும் நந்திதா தாஸ் இவர்கள் எல்லாம் பிடிக்கும். கதாநாயகிகளாக அவர்கள் முத்திரை பதித்துள்ளனர். அதுபோல என் பணியிலும் நான் முத்திரை பதிக்க விரும்புகிறேன்" என்கிறார்.
இதற்குமுன்பு டிமாண்டி காலனி 2 படத்தில் அருள்நிதி தங்கையாக நடித்தவர், இப்போது ஹீரோயினாக நடிக்க விரும்புகிறேன் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.