பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

சில உண்மை சம்பவங்களை படமாக எடுப்பார்கள். சில சம்பவங்கள் படங்களை பார்த்தும் உருவாகும். சில குற்றவாளிகள் தாங்கள் இந்த படத்தை பார்த்துதான் இப்படி செய்தோம் என்று கூறுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமானது 100வது நாள் படம்.
இந்த படத்தில் கொலை செய்து பிணத்தை சுவரில் மறைத்து வைப்பது பார்த்துதான் தானும் கொலை செய்து பிணத்தை மறைத்து வைத்ததாக பின்னாளில் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கர் கூறினான்.
100வது நாள் படம் 1984ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் 'செட் நோட் இன் நீரோவின்' என்ற இத்தாலிய படத்தின் அப்பட்டமான காப்பி. தனது குரு பாரதிராஜா எடுத்த 'சிகப்பு ரோஜாக்கள்' படம் போன்று தானும் எடுக்க விரும்பிய மணிவண்ணன் இயக்கிய படம். இதில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தின் நாயகி நளினிக்கு சிலர் கொல்லப்படுவது போன்ற முன்னறிவிப்பு வரும். மறுநாள் அது நடக்கும். அவளுக்கு முன்னறிவிப்பு செய்வது யார்? கொலை செய்வது யார், கொலை செய்யப்படுவது யார் என்பதுதான் படத்தின் கதை.
தமிழில் பெரிய வெற்றி பெற்று மலையாளத்தில் ஆயிரம் கண்ணுகள் (1986) என்ற பெயரிலும், ஹிந்தியில் 100 டேஸ் (1991) என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம், குறைந்த செலவில், பன்னிரண்டு நாட்களில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.