ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சில உண்மை சம்பவங்களை படமாக எடுப்பார்கள். சில சம்பவங்கள் படங்களை பார்த்தும் உருவாகும். சில குற்றவாளிகள் தாங்கள் இந்த படத்தை பார்த்துதான் இப்படி செய்தோம் என்று கூறுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமானது 100வது நாள் படம்.
இந்த படத்தில் கொலை செய்து பிணத்தை சுவரில் மறைத்து வைப்பது பார்த்துதான் தானும் கொலை செய்து பிணத்தை மறைத்து வைத்ததாக பின்னாளில் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கர் கூறினான்.
100வது நாள் படம் 1984ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் 'செட் நோட் இன் நீரோவின்' என்ற இத்தாலிய படத்தின் அப்பட்டமான காப்பி. தனது குரு பாரதிராஜா எடுத்த 'சிகப்பு ரோஜாக்கள்' படம் போன்று தானும் எடுக்க விரும்பிய மணிவண்ணன் இயக்கிய படம். இதில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தின் நாயகி நளினிக்கு சிலர் கொல்லப்படுவது போன்ற முன்னறிவிப்பு வரும். மறுநாள் அது நடக்கும். அவளுக்கு முன்னறிவிப்பு செய்வது யார்? கொலை செய்வது யார், கொலை செய்யப்படுவது யார் என்பதுதான் படத்தின் கதை.
தமிழில் பெரிய வெற்றி பெற்று மலையாளத்தில் ஆயிரம் கண்ணுகள் (1986) என்ற பெயரிலும், ஹிந்தியில் 100 டேஸ் (1991) என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம், குறைந்த செலவில், பன்னிரண்டு நாட்களில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.