அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து |

இப்போதெல்லாம் விஷாலின் படங்களை விட அவரைப் பற்றிய செய்திகள்தான் அதிகமாக வருகிறது. அவர் எங்கு சென்றாலும், எதை செய்தாலும் பரபரப்பாகிறார். பட விழாவில் ஏற்பட்ட கை நடுக்கம், கூவாகம் விழாவில் மயங்கியது என அடுத்தடுத்து உடல்நல பாதிப்பு சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் தான் ஒரு மாதமாக காதலித்து வருவதாகவும் நான்கு மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நடிகர் சங்க கட்டிடம் தான் என் கனவு. அதனால் தான் கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே எனக்கு திருமணம் என்று அறிவித்தேன். வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் இதை சொல்லவில்லை. ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் 9 ஆண்டுகள் தாண்டிவிட்டது.
நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையும் நிலையில் இருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அனேகமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் எனக்கு திருமணம் உறுதியாக நடக்கும். என் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி கூட எனக்கு திருமணம் நடைபெறலாம். எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்.
நான் திருமணம் செய்யப்போகும் பெண் யார் என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன். விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன். பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம்தான்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.