கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிகை சமந்தா காதலில் விழாமல் இருந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் பாலிவுட் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொரு உடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி இருப்பதுடன் அதுகுறித்த சமந்தாவின் கமெண்டுகள் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இதையடுத்து ராஜ் நிடிமொருவின் மனைவி ஷியாமலி டே, இன்ஸ்டாகிராமில் 'இந்த புகைப்படத்தை வைத்து என்னிடம் நலம் விசாரித்த அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என கோபமாக பதிவிட்டார்.
தற்போது மற்றொரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு கர்மா உங்களைத் தேடி வந்து ஆசீர்வதிக்கும். நீங்கள் செய்த தீய செயல்களுக்குக் கர்மா உங்களைப் பின்தொடரும். அது உங்களைத் தேடி வந்து தண்டிக்கும். உங்கள் ஆன்மா மலரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புறம் ரசிகர்கள் 'இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடதீர்கள்' என்று சமந்தாவுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். இன்னொரு புறம் 'உங்கள் கணவருக்கு புத்தி சொல்லுங்கள்' என்று ஷியாமலியையும் கேட் வருகிறார்கள்.