வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பிரபல பைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம். அவர் பேச்சு அதிரடியாக இருக்கும். ஒவ்வொரு மேடையிலும் பேசும்போதும் தமிழன் வென்றே தீருவான் என்று அரங்க அதிர சவுண்டு விடுவார். அவ்வப்போது கில்டு சினிமா அமைப்பு சம்பந்தப்பட்ட சர்ச்சையிலும் சிக்குவார். இப்போது குடும்ப பிரச்னையும் அவரை தொடர்கிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த இரவுப்பறவை பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியவர் ''என்னை சுற்றி பெரிய பிரச்னை ஓடுகிறது. என்னை கொல்ல சதி நடக்கிறது. நான் துாத்துக்குடிகாரன், வீரம் மிகுந்தவன். ஆனாலும், எனக்கு எதுவும் நடந்து விடக்கூடாது. இந்த மேடையில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என்னை பாதுகாக்க வேண்டும். அவர்கள் இருக்கிற தைரியத்தில் நான் இருக்கிறேன்' என்று பேசினார்.
கடைசியில் விழாவில் பேசிய திருமாவளவன். 'ஜாக்குவார் என்றால் சிறுத்தை என்று அர்த்தம். அவர் வீரம் மிகுந்தவர். அவருக்கு ஒன்றும் ஆகாது. நாங்கள் இருக்கிறோம். ஆனாலும், போலீசில் டிஜிபியிடம் பேசி அவருக்கு துப்பாக்கி உரிமம் வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறேன்'' என்றார்