சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் |

பிரபல பைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம். அவர் பேச்சு அதிரடியாக இருக்கும். ஒவ்வொரு மேடையிலும் பேசும்போதும் தமிழன் வென்றே தீருவான் என்று அரங்க அதிர சவுண்டு விடுவார். அவ்வப்போது கில்டு சினிமா அமைப்பு சம்பந்தப்பட்ட சர்ச்சையிலும் சிக்குவார். இப்போது குடும்ப பிரச்னையும் அவரை தொடர்கிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த இரவுப்பறவை பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியவர் ''என்னை சுற்றி பெரிய பிரச்னை ஓடுகிறது. என்னை கொல்ல சதி நடக்கிறது. நான் துாத்துக்குடிகாரன், வீரம் மிகுந்தவன். ஆனாலும், எனக்கு எதுவும் நடந்து விடக்கூடாது. இந்த மேடையில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என்னை பாதுகாக்க வேண்டும். அவர்கள் இருக்கிற தைரியத்தில் நான் இருக்கிறேன்' என்று பேசினார்.
கடைசியில் விழாவில் பேசிய திருமாவளவன். 'ஜாக்குவார் என்றால் சிறுத்தை என்று அர்த்தம். அவர் வீரம் மிகுந்தவர். அவருக்கு ஒன்றும் ஆகாது. நாங்கள் இருக்கிறோம். ஆனாலும், போலீசில் டிஜிபியிடம் பேசி அவருக்கு துப்பாக்கி உரிமம் வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறேன்'' என்றார்