ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இடையே ஏற்பட்டுள்ள பிரிவு பிரச்னையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண், என்னை வசைபாடுபவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார் பாடகி கெனிஷா.
நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவியான ஆர்த்தியை பிரிந்துவிட்டார். அவரிடம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நடந்து வருகிறது. இதனிடையே பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக உள்ளார் ரவி மோகன். இதை வைத்து ஆர்த்தி, ரவி மோகன், ஆர்த்தியின் அம்மா, தயாரிப்பாளர் சுஜாதா ஆகியோர் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆர்த்தி வெளியிட்ட கடைசி அறிக்கையில், ‛நாங்கள் பிரிய எங்கள் வாழ்வில் வந்த அந்த மூன்றாவது நபர் தான் காரணம்' என பாடகி கெனிஷாவை மறைமுகமாக சாடியிருந்தார். இதை வைத்து கெனிஷாவை பலரும் வலைதளங்களில் சகட்டுமேனிக்கு திட்டி கருத்து பதிவிட்டுள்ளனர்.
அந்த கருத்துக்கள் சிலவற்றை கெனிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் உடன், ‛‛நடந்த பிரச்னைகளுக்கு நான் தான் காரணம் என ஒருவர் பொய்யாக பேசுவதை நம்பினால் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லுங்கள். அங்கு உண்மை தெரியவரும். எனக்கு எதிராக பொய்யான வெறுப்புகளை மட்டுமே பரப்புகிறார்கள். தயவு செய்து அவற்றை நிறுத்துங்கள். நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்.
என்னைப் பற்றி நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், சாபங்கள், பொய்யான குற்றச்சாட்டுகள், உடல்ரீதியான அவமானங்கள், கொலை மிரட்டல்கள் போன்றவற்றால் நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என யோசித்து பார்த்து இருக்கிறீர்களா. கர்மா பற்றி பேசுகிறார்கள். ஆனால் பலருக்கு என்ன நடக்கிறது என பார்க்க நான் விரும்பவில்லை. நான் கடவுளை மட்டுமே நம்புகிறேன். இவை எல்லாவற்றையும் அவரிடம் விட்டுவிடுகிறேன். நான் அவரிடம் சரணடைகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.