ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இன்றைய தலைமுறைக்கு பி.விட்டலாச்சார்யா பற்றி அதிகம் தெரியாது. காரணம் அவர் அன்று நிகழ்த்திய தொழில்நுட்ப மாயாஜாலம் இப்போது செல்போனில் சர்வசாதாரணமாக காண கிடைக்கிறது. சமூக படங்கள் கோலோச்சிய காலத்தில் அவரின் மாயாஜால படங்கள் கடுமையான விமர்சிக்கப்பட்டது. 'சினிமா என்பது மக்களை மகிழ்விக்கத்தான், அறிவை வளர்க்க புத்தகங்கள் இருக்கிறது' என்பார்.
அவர் நாட்டுப்புற கதைகளில் இருந்து திரைப்படத்திற்கான கதைகளை உருவாக்கினார். அன்றைக்கிருந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை டைனோசர்கள், ராட்சத பல்லிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளுடன் சண்டையிடும் ஹீரோவைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் இல்லை. அவரது கலை இயக்குனர் நாகராஜ் மற்றும் நிபுணத்துவ ஒளிப்பதிவாளர்கள் எச்.எஸ். வேணு, எஸ்.டி. லால் ஆகியோரின் உதவியுடன், மேட் ஷாட்களைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் நம்பமுடியாத காட்சிகளை உருவாக்கினார்.
அவர் தனது படங்கள் அனைத்தையும் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாக்கி பின்னர் அதனை தமிழில் மொழிமாற்றம் செய்தார். 'பெண் குலத்தின் பொன் விளக்கு' என்ற சமூக படத்தையும், 'மந்திரி குமாரன்' என்ற சரித்திர படத்தையும் தமிழில் இயக்கினார். இன்று அவரின் 26வது நினைவு நாள்.