அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
சசி இயக்கிய 'பூ' படத்தில் மலையாள நடிகையான பார்வதி ஹீரோயினாக நடித்தார். அவர் நடித்த சிறந்த படங்களில் அதுவும் ஒன்றாகிவிட்டது. இன்றும் அவரை பலரும் பூ பார்வதி என்று அழைக்கின்றனர். அடுத்து அவர் இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் லிஜோமோல் ஜோஸ் சிறப்பாக நடித்தார். 'பிச்சைக்காரன்' படத்தில் சாத்னாவும், 'டிஷ்யூம்' படத்தில் சந்தியாவும் ஹீரோயினாக நடித்திருந்தனர். அவர் படங்களில் நடித்த இந்த மலையாள நடிகைகளுக்கு தனி மவுசு ஏற்பட்டது.
இந்நிலையில், சசி இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் 'லப்பர் பந்து, மாமன்' படங்களில் நடித்த மலையாள நடிகையான சுவாசிகா முக்கியமான வேடத்தில் வருகிறார். இது விஜய் ஆண்டனி, அவர் மருமகன் அஜய் இணைந்து நடிக்கும் இரட்டை ஹீரோ கதையாம். தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அதனால், இந்த படம் பிச்சைக்காரனின் அடுத்த பாகமாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.