ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

அயோத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தினர் இங்கு என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவான இந்த படம் பல திரைபிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதோடு, திரைக்கு வந்த மூன்றே வாரங்களில் 75 கோடி வசூலித்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் குறித்து சசிகுமார் கூறும்போது, ''இப்பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் எப்படி முதலில் கதை சொன்னாரோ, அதை அப்படியே படமாக்கி இருக்கிறார். அவர் சொன்னதை அப்படியே உள்வாங்கி நானும் நடித்தேன். அதனால்தான் இந்த படத்தின் மூலம் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்தும் இந்த படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருக்கிறார். அவர் நடித்த அந்த வேடம் இந்த படத்திற்கு உணர்வுப்பூர்வமான ஒரு பலத்தை கொடுத்தது'' என்கிறார் சசிகுமார்.