ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்த 'ரெட்ரோ' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். அவருடன் திரிஷா, ஷிவதா, சுவாசிகா, நட்டி நடராஜன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 'சூர்யா- 45வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையப் போகிறது. மேலும் தற்போது படப்பிடிப்புக்கு நடுவே இறுதி கட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதனால் ஜூன் இரண்டு அல்லது மூன்றாம் வாரங்களில் இருந்து இந்த படத்திற்கான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும். முக்கியமாக இது செலிப்ரேஷன் படம் என்பதால் ஒரு பண்டிகை நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தின் டைட்டில் குறித்து தகவல் விரைவில் வெளியாகும்' என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.
படத்தை அக்டோபர் 1ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அதே தேதியில் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா அல்லது வேறு தேதியை முடிவு செய்வார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.