ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50 ஆண்டு சாதனையை புகழும் விதமாகவும், அவர் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தப்படும். தமிழக அரசு சார்பில் அந்த விழா நடக்கும் என்று சட்டசபையிலேயே முதல்வர் அறிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இதுவரை ஏனோ சினிமா விழாவில் கலந்து கொண்டது இல்லை. அதேப்போல் துணை முதல்வர் ஆன பின் சினிமா நிகழ்ச்சிகளை உதயநிதியும் தவிர்க்கிறார். ஆனால் அரசு விழா என்பதால் இருவரும் இளையராஜாவின் பாராட்டு விழாவில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. முன்னணி நடிகர்களும் வருவார்கள்.
தமிழ் சினிமாவில் முக்கியமான விழாவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த விழா தள்ளிப்போய் உள்ளது. ஜூன் 3ம் தேதிதான் இளையராஜாவுக்கு பிறந்தநாள். ஆனால், அன்றைய தினம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் என்பதால் ஒருநாள் முன்னதாக தனது பிறந்தநாளை இளையராஜா கொண்டாடி வந்தது குறிப்பிடத்தக்கது.