கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
நடிகர் விஷால், சாய் தன்சிகா திருமணம் ஆகஸ்ட் 29ம் தேதி நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின்னரும் சாய் தன்சிகா நடிப்பார் என விஷால் கூறிவிட்டார். அவர் கதைநாயகியாக நடித்த 'யோகிடா' விரைவில் ரிலீஸ் ஆகிறது. அதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். அடுத்து திரைப்பட கல்லுாரி மாணவர் அசோக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கப்போகிறார்.
ஒருவர் ஆழ்மனதில் நிலவும் அமைதி மற்றும் மனோதத்துவ ரீதியாக அணுகுவதே இந்த படத்தின் கரு. தன்ஷிகாவுடன் கீதா கைலாசம், சிம்ரன் குப்தா உட்பட பலர் நடிக்கிறார்கள். அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகளான ஜாலிபாய், டிகிலிபூர் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்க உள்ளது. சமீபத்தில் நாகா இயக்கத்தில் தன்சிகா நடித்த 'ஐந்தாம் வேதம்' என்ற வெப்சீரியல் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது.