சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இசையமைப்பாளர் இளையராஜா தனது 83வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சென்னை, தி.நகரில் உள்ள ஸ்டூடியோவிலும், வீட்டிலும் திரளான ரசிகர்கள், சினிமாகாரர்கள், விஐபிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அவருக்கு நேற்று 83வது பிறந்தநாள் என்பதால் பலர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். ஸ்டூடியோ வாசலில் நின்று அவர் பாடல்களை பாடினர். இன்றைக்கு முன்னணி நடிகர்கள் தொடங்கி சின்ன நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், சினிமாகாரர்கள் என அனைவரிடமும் சோஷியல் மீடியா கணக்கு உள்ளது. ஆனால், நேற்றைக்கு பல முன்னணி நடிகர்கள், இளையராஜாவுடன் பணியாற்றவர்கள் , அவர் இசையில் பாடியவர்கள், அவரால் உயர்ந்தவர்கள், பணம் சம்பாதித்தவர்கள் என ஒரு தரப்பினர் அவருக்கு தங்கள் சோஷியல் மீடியாவில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமாக்களில் சீனியர்களை கொண்டாடுகிறார்கள். தமிழில் 80 வயதை தொட்ட ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். ஆனால், அவர் பிறந்தநாளுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாவில் கூட பலர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது இளையராஜாவுக்கு நெருக்கமானர்களின் ஆதங்கமாக இருக்கிறது.