சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தோழா படத்திற்கு பின் மீண்டும் ஒரு தமிழ் ஹீரோவுடன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து இருக்கிறார் பிரபல தெலுங்கு ஹீரோவான நாகர்ஜூனா. தோழாவில் அவர் கார்த்தியுடன் நடித்தார். அந்த படத்தின் கதையும், சீன்களும் இன்றும் பேசப்படுகின்றன. இப்போது குபேராவில் தனுசுடன் இணைந்து நடித்து இருக்கிறார். கஷ்டப்படும் ஒருவன் பணக்காரன் ஆவதே கதை என்று கூறப்படுகிறது. அதனால், சென்னையில் நடந்த குபேரா பட விழாவில் டம்மி நோட்டுகளால் 'ரெட்கார்பேட்' சுற்றுவட்டாரங்கள் டிசைன் செய்யப்பட்டு இருந்தன.
குபேரா மேடையில் பேசிய நாகர்ஜூனா ''தனது சென்னை வாழ்க்கை, கிண்டி கல்லுாரியில் படித்தது உட்பட பல விஷயங்களை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார். அடுத்தும் ஒரு பிரபல தமிழ் ஹீரோ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் நாகர்ஜூனா, அது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி.
சென்னையில் வளர்ந்ததால் ஓரளவு நன்றாக தமிழ் பேசுவார் நாகர்ஜூனா. அவர் மூத்த மகன் நாகசைதன்யாவும் தமிழ் பேசுவார். பிரபல தெலுங்கு ஹீரோ நாகேஸ்வரராவ் மகனான நாகர்ஜூனா, கமல் பாணியில் குழந்தை பருவத்தில் இருந்தே நடிக்கிறார். அவரும் நடிக்க வந்து 60 ஆண்டுகளை தாண்டிவிட்டது. அவர் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் நல்ல கதை என்றால் பந்தா இல்லாமல் தமிழ் ஹீரோக்களுடன் பணிபுரிவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.