வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
திருவிதாங்கூர் உயர் நீதிமன்றம் ஒரு சமஸ்தானமாக இருந்தபோது அதன் நீதிபதியின் மகனாக இருந்தார் ஜோசப் தளியத். பழமைவாத குடும்பத்திலிருந்து பிரிந்து, திரைப்படங்களை உருவாக்கும் கனவுகளுடன் சென்னைக்கு வந்தார். அப்போது தென்னிந்திய திரைப்பட முன்னோடியாக இருந்த எஸ். சவுந்தரராஜன் நடத்தி வந்த 'தமிழ்நாடு டாக்கீஸ்' நிறுவனத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
அவரிடம் சினிமா கற்ற பிறகு 'சிட்டாடல் பிலிம் கார்பரேஷன்' என்ற புதிய நிறுவனத்தை சொந்தமாக உருவாக்கி அதன் மூலம் பல படங்களை இயக்கினார். அவர் தயாரித்த, இயக்கிய படங்களில் எஸ்.சவுந்தரராஜன் உதவியாளராக பணியாற்றினார். இதற்கிடையில் சவுந்தரராஜன் 'பங்கஜவல்லி' என்ற படத்தை இயக்கி, தயாரித்துள்ளார் என்பதை தவிர அவரைப் பற்றி வேறு தகவல்கள் எதுவும் இல்லை.
'பங்கஜவல்லி' படத்தில் பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி, குமாரி ருக்மகணி, நடித்துள்ளனர். பாபநாசம் சிவன் இசை அமைத்துள்ளார். 1947ம் ஆண்டு வெளியாகி உள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு 'சென்னை மாகாணம்' என்று இருந்ததை சவுந்தர பாண்டியனார் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, திராவிட இயக்ககத் தலைவர்கள் போராடித்தான் 1967ம் ஆண்டு தமிழ்நாடு என்ற பெயரை பெற்றனர். ஆனால் அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே தனது நிறுவனத்திற்கு 'தமிழ்நாடு டாக்கீஸ்' என்று பெயர் வைத்து அந்த சொல்லை அறிமுகப்படுத்தியர் எஸ்.சவுந்தரராஜன். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் போனது மிகப்பெரிய வரலாற்று இருட்டடிப்பு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.