தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

என்.டி.ராமராவ் என்றாலே அவர் நடித்த புராண படங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் பல படங்களை இயக்கி உள்ளார், பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
'சீத்தாராம கல்யாணம்' என்ற படத்தை முதன் முறையாக 1961ம் ஆண்டு இயக்கினார். அதற்பிறகு 20 படங்கள் வரை இயக்கினார். அவைகள் பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர கதைகள். 1966ம் ஆண்டு 'ஸ்ரீகிருஷ்ண பாண்டேவியாம்' என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். அதன்பிறகு 19 படங்களுக்கு திரைக்கதை எழுதினார். 1967ம் ஆண்டு 'உம்மடி குடும்பம்' என்ற படத்திற்கு கதை எழுதினார். அதை தொடர்ந்து 13 படங்களுக்கு கதை எழுதினார். தமிழில் 'கண்ணன் கருணை' என்ற படத்திற்கும் சிவாஜி நடித்த 'சரித்திர நாயகன்' படத்திற்கு கதை எழுதினார், அந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார்.