வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்க, கலைப்புலி தாணு தயாரிக்க, உருவாக உள்ளதாக 2022ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட படம் 'வாடிவாசல்'. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
பலருக்கும் எழுந்த சந்தேகத்துக்கிடையில் இந்த வருடப் பொங்கல் சமயத்தில் வெற்றிமாறன், சூர்யாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து 'அகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது,' என்ற அறிவிப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு.
அதன்பின் மார்ச் மாதத்தில் வெற்றிமானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பாடல் பதிவுகள் ஆரம்பமாகிவிட்டது என்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
இப்போது 'வாடிவாசல்' படம் டிராப் ஆகிறது என மீண்டும் ஒரு தகவல் பரவி வருகிறது. சூர்யா அடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவிக்கும் வரை எதுவும் உண்மையில்லை என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.