கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
தமிழ் சினிமா ஆளுமைகளில் முக்கியமானவர் ஸ்ரீப்ரியா, சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக் என மூன்று தலைமுறை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தென்னிந்திய மொழிகளில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.
ஆனால் அவர் சில படங்களை இயக்கவும் செய்தார். 1984ம் ஆண்டு 'சாந்தி முகூர்த்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அவர் நடித்த 'ஆட்டுக்கார அலமேலு' படத்தின் வெற்றிக்கு பிறகு அதே பாணியில் 'எங்க ஊரு ஆட்டுக்காரன் 'என்ற படத்தை இயக்கினார்.
தொடர்ந்து தமிழில் 'நானே வருவேன், மாலினி 22 பாளையங்கோட்டை' படங்களை இயக்கினார். 'நாகினி' என்ற படத்தை கன்னடத்தில் இயக்கினார். கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த 'திரிஷ்யம்' படத்தை தெலுங்கில் இயக்கினார்.