தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சந்தானம் நடித்த டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் ரவிமோகன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ‛ப்ரோ கோட்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை ரவிமோகனே தயாரிக்கிறார். இதென்ன தலைப்பு என்று இயக்குனரிடம் கேட்டால் கதைக்கும், தலைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விரைவில் அதை சொல்வோம் என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஒன்றல்ல இரண்டல்ல 4 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் முறையாக அறிவிக்கப்படும். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், அனிமல், அர்ஜூன் ரெட்டி படங்களுக்கு இசையமைத்த ஹர்சவர்தன் ரமேஸ்வர் இசையமைக்கிறார். அவர் பின்னணி இசையிலும் மிரட்டுவார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சந்தானத்தை வைத்து நான் இயக்கிய டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்கள் கமர்ஷியலாக ஜெயித்தது. இதிலும் காமெடி இருக்கிறது. கூடுவே ஆக் ஷனும் இருக்கிறது'' என்கிறார்