தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'முண்டாசுப்பட்டி, ராட்சசன்' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ராம்குமார், விஷ்ணு விஷால் இணைந்துள்ள படம் 'இரண்டு வானம்'. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நேற்று படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமாருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இரண்டு வானம்' கடைசி நாள் படப்பிடிப்பு, 150வது நாள் படப்பிடிப்பு. இந்தப் பயணத்தை நீங்களும் விரைவில் பெரிய திரையில் உணரப் போகிறீர்கள். தனித்துவமான சுவாரசியமான ஒன்றை மீண்டும் 'குக்' செய்துள்ளார் ராம்குமார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் கதை என்ன மாதிரியான கதை என்பது தெரியவில்லை. இருந்தாலும் அதற்காக 150 நாட்கள் படப்பிடிப்பு என்பது அதிக நாட்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். முன்னணி நடிகர், இயக்குனர், பெரிய பட்ஜெட் படம், சரித்திரப் படம் என்றால் அத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடத்தினாலும் பரவாயில்லை. இந்த கூட்டணிக்கு இத்தனை நாட்கள் படப்பிடிப்பு என்பது மிக அதிகமே என்பது பரவலான கருத்தாக உள்ளது.
சிக்கனமான படமெடுக்கும் சத்யஜோதி நிறுவனம் இவ்வளவு நாட்கள் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதே பெரிய விஷயம் என்கிறார்கள். படம் வந்த பிறகே அத்தனை நாட்கள் ஏன் என்ற விவரம் ரசிகர்களுக்கும் தெரிய வரும்.