தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மறைந்த விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருவரும் 80களில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். கிராமப்புறங்களில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் இருக்கிறதோ இல்லையோ விஜயகாந்த் ரசிகர் மன்றம் கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை அந்தக் காலத்தில் இருந்தது.
வழக்கம் போல அவரது வாரிசும் சினிமாவில் நடிக்க வந்தார். அவரது இரண்டாவது மகனான சண்முகப்பாண்டியன் 2015ல் வெளிவந்த 'சகாப்தம்' படம் மூலம் கதாநாகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 'மதுர வீரன்' படத்தில் நடித்தார். அதுவும் பெரிதாகப் பேசப்படவில்லை. மூன்றாவது படமாக அவர் நடித்துள்ள 'படை தலைவன்' படம் நாளை வெளியாக உள்ளது.
இந்தப் படத்திலும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகத்தான் நடித்துள்ளார். விஜயகாந்த் ரசிகர்கள் வந்து பார்த்தாலே படம் வெற்றிப் படமாக அமைந்துவிடும். படம் நன்றாக இருந்தால் மற்ற ரசிகர்களும் வந்து படம் பார்ப்பார்கள். கடந்த பத்து வருடங்களில் மூன்றே படங்களில் நடித்துள்ள சண்முகப்பாண்டியன் இந்த 'படை தலைவன்' படம் மூலம் வெற்றியைப் பதிவு செய்வாரா என திரையுலகினரும் எதிர்பார்த்துள்ளார்கள்.
இந்தப் படத்துடன் நாளைய வெளியீடாக 'கட்ஸ், ஹோலோகாஸ்ட்' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களும் வெளியாக உள்ளன.