அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் |

'குட் பேட் அக்லி' படத்தை அடுத்து கார் பந்தயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். இவரது அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கப் போகிறார். அஜித்தின் 64வது படமான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கேஜிஎப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் விக்ரமுடன் 'கோப்ரா' படத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்ட ஆதிக் ரவிச்சந்திரன் விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பை வெளியிடப்போகிறார்.
அதோடு, அஜித் நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நிலையில் முன்னதாகவே மற்ற நடிகர், நடிகைகளை வைத்து படப்பிடிப்பை தொடங்கவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். அந்தவகையில் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் அடுத்தடுத்து நடித்த அஜித், அதன்பிறகு வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களில் நடித்தவர், இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தை அடுத்து மீண்டும் நடிக்க போகிறார்.