நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
'கரகாட்டக்காரன்' படத்தில் காமெடி மூலம் புகழ் பெற்றவர் சொப்பன சுந்தரி. திரையில் தோன்றாத அந்த கேரக்டரை இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் யார் சொப்பன சுந்தரி தெரியுமா? நடிகை அஞ்சலி தேவி.
1950ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் 'சொப்பன சுந்தரி' பிரதிபா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் கன்டசாலா பலராமையா தயாரித்து, இயக்கினார். இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அஞ்சலி தேவி நடித்திருந்தனர். சி.ஆர்.சுப்புராமன் மற்றும் கன்டாசாலா இணைந்து இசையமைத்திருந்தார்கள்.
ஒரு நாட்டின் இளவரசனின் கனவில் அடிக்கடி ஒரு அழகான பெண் வந்து செல்கிறாள். கனவிலேயே அவளை காதலிக்கும் இளவரசன் அவளை தேடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறான். இறுதியாக அவளை கண்டுபிடிக்கிறான், காதலிக்கிறான் திருமணம் செய்யப் போகும்போது தான் தெரிகிறது அவள் வான லோகத்து தேவதை என்று.
வானலோகச் சட்டப்படி தேவதை ஒரு மனிதனை திருமணம் செய்ய முடியாது என்பதால் சிக்கல் வருகிறது. இதையும் மீறி இருவர் திருமணம் எப்படி நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இளவரசனின் சொப்பனத்தில் வந்த சுந்தரி என்பதால் படத்தின் டைட்டில் 'சொப்பன சுந்தரி' என்று வைக்கப்பட்டது. இளவரசனாக நாகேஸ்வரராவும், சொப்பன சுந்தரியாக அஞ்சலிதேவியும் நடித்தனர். பின்னர் இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.