தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில் ஓகே கண்மணி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மெண்டல் மனதில் என்ற பாடலை பாடி பிரபலமானவர் பாடகி ஜொனிடா. அதன்பிறகு அனிருத் இசையில் செல்லம்மா மற்றும் அரபிக் குத்து பாடல்களை பாடி மேலும் பிரபலமானார். உலக அளவில் பல இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பாடகி ஜொனிடா கூறுகையில், இன்ஸ்டாகிராமில் அதிக பாலியல் சீண்டல் நடக்கிறது. ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டதோடு, அதன் பின்னணியில் எனது புகைப்படத்தையும் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்ந்து வந்தபோதும் யார் மீதும் நான் இதுவரை வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை. அது போன்ற நபர்களை உடனடியாக பிளாக் செய்து விடுகிறேன். இதுபோன்று சோசியல் மீடியாவில் நான் பல பாலியல் தொல்லைகளை சந்தித்து இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் ஜொனிடா.