சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழில் ஓகே கண்மணி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மெண்டல் மனதில் என்ற பாடலை பாடி பிரபலமானவர் பாடகி ஜொனிடா. அதன்பிறகு அனிருத் இசையில் செல்லம்மா மற்றும் அரபிக் குத்து பாடல்களை பாடி மேலும் பிரபலமானார். உலக அளவில் பல இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பாடகி ஜொனிடா கூறுகையில், இன்ஸ்டாகிராமில் அதிக பாலியல் சீண்டல் நடக்கிறது. ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டதோடு, அதன் பின்னணியில் எனது புகைப்படத்தையும் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்ந்து வந்தபோதும் யார் மீதும் நான் இதுவரை வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை. அது போன்ற நபர்களை உடனடியாக பிளாக் செய்து விடுகிறேன். இதுபோன்று சோசியல் மீடியாவில் நான் பல பாலியல் தொல்லைகளை சந்தித்து இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் ஜொனிடா.