கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி | கல்லீரல் பிரச்னை: சனா ஆஸ்பத்திரியில் அட்மிட் | பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம் |
மகாராஜா, போர் தொழில், ஆர் யூ ஓகே பேபி உள்ளிட்ட சில படங்களில் குணசித்ர நடிகையாக நடித்தவர் முல்லை அரசி. 'கொட்டுக்காளி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து பிரபலமானார்.
இந்த நிலையில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் முல்லை அரசி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை அஜித் விநாயகா பிலிம்ஸ் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்குகிறார்கள். கதாநாயகியாக சேத்தன், 'பருத்திவீரன்' சரவணன் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
படம் குறித்து விமல் கூறும்போது, "எப்போதுமே கிராமத்து படங்களுக்கு என்று தனி எதிர்பார்ப்பு இருக்கும். கிராமத்து கதைக்களம் கொண்ட படங்கள் ரசிகர்களின் மனதை எளிதில் ஈர்க்கும். எனக்கும் மற்ற கதைகளை விட கிராமத்து கதைகளில் நடிப்பது மிகவும் பிடிக்கும். அந்தவகையில் இந்த புதிய படம் அமைந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே என் வேலை. இனி பழைய சுறுசுறுப்புடன் என் நடிப்பை பார்க்கலாம்'', என்றார்.