தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
1980களில் ஹீரோக்கள் 2 வேடங்களில் நடிப்பதை ஒரு சாதனையாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் இரண்டு வேடங்களில் நடித்தார்கள். இந்த வரிசையில் அப்போது வேகமாக வளர்ந்து வந்த டி.ராஜேந்தரும் தன் பங்கிற்கு 2 வேடங்களில் நடித்த படம் 'உறவைக் காத்த கிளி'. இந்த படத்தில்தான் தன் மகன் சிம்புவையும் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
டி.ராஜேந்தருடன் சரிதா, ஜீவிதா, புஷ்பலதா, எஸ்.எஸ்.சந்திரன், நளினி, சங்கிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரே தயாரித்தும் இருந்தார். இசையும் அவரே. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும், அவரது முந்தைய படங்களை போன்று இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. காரணம் அவரது இரட்டை வேட நடிப்பை அவரது ரசிகர்கள் மட்டுமே ரசித்தார்கள். ஜீவிதா, ஜெயந்த் இளம் ஜோடிகளாக நடித்திருந்தார்கள்.
மதுவின் கேடு-ஐ மையப்படுத்தி உருவாகி இருந்த இந்தப் படத்தில் டி.ராஜேந்தர் குடிகாரராகவும், குடிக்கு எதிரானவராகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.