சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி | டாம் குரூசுக்கு சிறப்பு ஆஸ்கர் விருது அறிவிப்பு | பிளாஷ்பேக்: டி.ராஜேந்தர் 2 வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: புராண படங்களில் நடித்து புகழ்பெற்ற பாலசுப்பிரமணியம் |
1980களில் ஹீரோக்கள் 2 வேடங்களில் நடிப்பதை ஒரு சாதனையாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் இரண்டு வேடங்களில் நடித்தார்கள். இந்த வரிசையில் அப்போது வேகமாக வளர்ந்து வந்த டி.ராஜேந்தரும் தன் பங்கிற்கு 2 வேடங்களில் நடித்த படம் 'உறவைக் காத்த கிளி'. இந்த படத்தில்தான் தன் மகன் சிம்புவையும் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
டி.ராஜேந்தருடன் சரிதா, ஜீவிதா, புஷ்பலதா, எஸ்.எஸ்.சந்திரன், நளினி, சங்கிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரே தயாரித்தும் இருந்தார். இசையும் அவரே. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும், அவரது முந்தைய படங்களை போன்று இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. காரணம் அவரது இரட்டை வேட நடிப்பை அவரது ரசிகர்கள் மட்டுமே ரசித்தார்கள். ஜீவிதா, ஜெயந்த் இளம் ஜோடிகளாக நடித்திருந்தார்கள்.
மதுவின் கேடு-ஐ மையப்படுத்தி உருவாகி இருந்த இந்தப் படத்தில் டி.ராஜேந்தர் குடிகாரராகவும், குடிக்கு எதிரானவராகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.