இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் |
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா மற்றும் பலர் நடிக்க 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, இலங்கை என விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக படப்பிடிப்பு நின்று போய் இருந்தது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய மற்றொரு படமான 'மதராஸி' படத்தை முடித்துக் கொடுக்க சிவகார்த்திகேயன் போய்விட்டார் என்றார்கள். அதற்கடுத்து அமலாக்கத்துறை விசாரணையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியதும் படப்பிடிப்பை மீண்டும் தாமதப்படுத்தியதாகச் சொன்னார்கள். தற்போது வழக்கிலிருந்து விடுபட்டுள்ளதால் 'பராசக்தி' உள்ளிட்ட தன்னுடைய மற்ற பட வேலைகளை ஆகாஷ் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.