துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
மலையாளத்தில் பிரபல நடிகரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா)'. முழுக்க முழுக்க நீதிமன்ற பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிரவீன் நாராயணன் இயக்கியுள்ளார். ஜூன் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு எந்தவித 'கட்'களும் இன்றி யு/ஏ 13+ சான்றிதழையும் பெற்றது. ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென சென்சார் குழுவினர் இந்த படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் செய்யும்படி படக்குழுவினருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
குறிப்பாக டைட்டிலில் இடம் பெறும் ஜானகி என்கிற பெயரை மாற்றும்படி அவர்கள் நிர்பந்தித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள படத்தின் இயக்குனர் பிரவீன் நாராயணன், அதனால் வரும் ஜூன் 27ம் தேதி திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆகாது என்றும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டு இதே டைட்டிலை தக்க வைப்பார்களா அல்லது டைட்டிலை மாற்றுவார்களா என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஒரு மத்திய இணை அமைச்சராக இருக்கக்கூடிய சுரேஷ்கோபி நடித்த படம் கூட சென்சாரில் சிக்கலை எதிர்கொள்கிறது என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.