தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சூர்யா நடித்த 'ரெட்ரோ' கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்தினார் சூர்யா. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஐதராபாத்தில் நடந்த விழாவில் விஜய்தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசும்போது பழங்குடியின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து தெலுங்கானா பழங்குடி இன வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கிஷன் ராஜ் சவுகான், விஜய் தேவரகொண்டா மீது ஐதராபாத் எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதேபோன்று மாநில பழங்குடியின மக்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நெனாவத் அசோக்குமார், சைபராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ராய்துர்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போன்று ஐதராபாத்தில் உள்ள சஞ்சீவ் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விஷயத்தில் விஜய்தேவரகொண்டா வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டால் வழக்கு முடிவுக்கு வரும் இல்லாவிட்டால் விஜயதேவரகொண்டா கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.