சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்கில் வெளியான 'உப்பென்னா' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிர்த்தி ஷெட்டி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில், அவர் கைவசம், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, வா வாத்தியார், ஜீனி' படங்கள் உள்ளன.
இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கிர்த்தி ஷெட்டி பேசுகையில், ''கோவையின் கலாசாரமும் பாரம்பரியமும், கோவையில் பேசப்படும் தமிழும் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு கிடைத்த அன்பும் வரவேற்பும் தன்னை நெகிழ வைத்தன. நான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். அந்தப் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவை தருவார்கள் என நம்புகிறேன்'' எனப் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.