பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? |
தமிழ் இசை அமைப்பாளர்கள் தனித்தனியாக பொது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நேரடி இசை நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் இசை அமைப்பாளர்கள் வித்யாசாகரும், விஜய் ஆண்டனியும் அடுத்தடுத்த நாட்களில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 20ம் தேதி வித்யாசாகரும், 21ம் தேதி விஜய் ஆண்டனியும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். தனித்தனி இசை நிகழ்ச்சி என்றாலும் நடத்தப்படும் இடம், நடத்தும் அமைப்பு ஒன்றுதான். இரு நிகழ்ச்சிகளிலும் முன்னணி பாடகர்கள், பாடகிகள் பாடுகிறார்கள், முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.