கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
இன்றைய காலகட்டத்தில் திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க இன்ஸ்டாகிராம், எக்ஸ் கணக்குகளை தவறாது பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். ஆனால் சில விஷமிகள் அவ்வப்போது இது போன்ற பிரபலங்களின் சோசியல் மீடியா கணக்குகளை ஹேக் செய்து அவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதுடன் அவர்களை தவறாக நினைக்கும் விதமாக பல செய்திகளையும் தங்கள் இஷ்டம் போல வெளியிடுகின்றனர். அவ்வப்போது இது நடைபெறுவது உண்டு. இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை அலர்ட் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ருதிஹாசன், “என்னுடைய எக்ஸ் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அதில் இருப்பவை நான் பதிவிட்டது அல்ல. அதனால் நான் அந்தப் பக்கத்திற்கு மீண்டும் திரும்பி வரும் வரை யாரும் அந்த பக்கத்தில் பதில் கருத்து போட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமும் ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அது ஹேக் செய்யப்படவில்லை என்றாலும் கூட, அந்த சமயத்தில் தனது மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் வேலை செய்யவில்லை என்று சில நாட்கள் வரை அதை பயன்படுத்த முடியாமல் சிரமங்களை சந்தித்தார் ஸ்ருதிஹாசன்.