தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பிரபு நடிக்கும் படங்கள் எப்போதுமே ஒரு கட்டுக்கோப்புடன் இருக்கும். வன்முறை, ஆபாசம் அதிகமான படங்களில் அவர் நடிப்பதில்லை. அப்படி இருந்தும் அவரது சில படங்கள் தணிக்கையில் சிக்கியது. அவற்றில் ஒன்று 'அடுத்தாத்து ஆல்பர்ட்'.
இந்த படத்தின் கதை சுவாரஸ்மானது. பிரபு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், ஊர்வசி பிரமாண சமூகத்தை சேர்ந்தவர். இருவருமே பக்கத்து வீட்டுக்காரர்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும் அடிமனதில் இருவரும் காதலிப்பார்கள். பிரபுவின் தம்பியும், ஊர்வசியின் தங்கையும் காதலிப்பார்கள். இவர்களின் காதலை சேர்த்து வைக்க இருவரையும் தற்கொலை செய்தது போல நடிக்கச் சொல்வார்கள். இந்த திட்டம் நிறைவேறுவதற்கு முன்பே இருவரும் நிஜமாகவே தற்கொலை செய்து கொள்வார்கள். அதன்பின் பிரபுவும், ஊர்வசியும் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.
படத்தில் மதம் குறித்து கடினமான விமர்சன வசனங்கள் இருந்தது. இதனால் அந்த வசனங்களை நீக்கினால்தான் சான்றிதழ் தர முடியும் என்று தணிக்கை வாரியம் கூறியது. அதன்பிறகு நடந்த பேச்சு வார்த்தையில் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் தணிக்கை குழுவிற்கு விளக்கம் அளித்தார். அதன்பிறகு கதையோட்டம் பாதிக்காத வசனங்கள் நீக்கப்பட்டு படம் வெளியானது. இந்த படத்தின் தகவல் வெளியில் பரவ, இயக்குனர் ரங்கராஜனுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறுவார்கள்.
இதனால் படத்தின் ரிலீஸ் போஸ்டரில் 'ஆர்ப்பாட்டகாரர்களின் அட்டகாசத்தை முறியடித்து, குண்டு வீசுவோரின் கோமாளித்தனத்தை தகர்த்தெறிந்து, சென்சார் போர்டின் நீதியான தீர்ப்பை சுமந்து வீரபவனி வருகிறார் ஆல்பர்ட்' என்ற வாசகம் இடம் பெற்றது.