சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பெங்களூருவைச் சேர்ந்த நிரஞ்சன் முகுந்தன் என்பவர் பாரா ஸ்விம்மிங்கில் பல சாகசங்களை செய்து கிட்டத்தட்ட நூறு பதக்கங்கள் வரை பெற்றுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பது தான் தனது வாழ்நாள் லட்சியம் என குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ எப்படியோ ரஜினியின் கவனத்திற்கு செல்லவே அதை தொடர்ந்து நிரஞ்சன் முகுந்தனுக்கு தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பு சமீபத்தில் மைசூரில் நடைபெற்ற ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்தது.
ரஜினியை சந்தித்த அந்த இனிய அனுபவம் குறித்து நிரஞ்சன் முகுந்தன் கூறும்போது, “ரஜினி சார் நான் சென்னையை சேர்ந்தவன் என நினைத்து தற்போது மைசூர் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்னை வந்து சந்திக்க முடியுமா என்று தகவல் அனுப்பி இருந்தார். அதன்பிறகு தான் நான் பெங்களூரை சேர்ந்தவன் என்று சொன்னதும் அப்படியானால் உடனடியாக வாருங்கள் என்று கூறினார். அதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று சந்தித்தேன். அவரை சந்தித்த அந்த தருணத்தை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை.
அவரை சந்திக்கும்போதே என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அமர்ந்து, என்னுடைய பயணங்கள் குறித்து பொறுமையாக நிறைய விசாரித்து கேட்டுக் கொண்டார். கடவுளின் குழந்தை என்று என்னை அழைத்ததுடன் எதிர்காலத்தில் இன்னும் சிறக்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நான் நூறாவது பதக்கம் வாங்கும் போது அணிந்திருந்த தொப்பியை எனது கிப்டாக ரஜினி சாருக்கு அளித்தேன்” என்று கூறியுள்ளார்.