பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‛வாடிவாசல்'. ஜல்லிக்கட்டு தொடர்புடைய படம் என்பதால் ஒரு ஜல்லிக்கட்டு காளையுடன் சூர்யா பயிற்சி எல்லாம் பெற்றார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படம் ஆரம்பிக்கவே இல்லை. இந்த படம் டிராப் ஆகிவிட்டது என கடந்த சில வாரங்களாக தகவல் பரவி வந்தது.
சூர்யா தரப்பிலிருந்து படத்தின் முழு திரைக்கதையை கேட்டதாகவும், அதை தந்த பிறகு படப்பிடிப்புக்கு போவோம் என சொன்னதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து வெற்றிமாறன் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதனிடையே இன்று வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோவில் வாடிவாசல் குறித்து ஒரு குழப்பமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
அதில், ‛‛வாடிவாசல் நம்ம ரைட்டிங்ல கொஞ்சம் தாமதம் ஆகுது. மேலும் டெக்னிக்கலாகவும் சில சிரமங்கள் உள்ளன. ஆர்ட்டிஸ்ட், விலங்குகள் மற்றும் மற்றவர்கள் பாதுகாப்புக்காக இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கறதால நாங்க இப்படி ஒண்ணு பண்ணலாம்னு யோசிச்சோம்'' என கூறிவிட்டு சிம்பு படம் பற்றிய பேச்சை தொடர்ந்தார்.
இவரின் பேச்சில் வாடிவாசல் படம் எப்போது துவங்கும் என தெளிவாக குறிப்பிடவில்லை. அவரே கொஞ்சம் குழப்பமாகத்தான் பதில் அளித்துள்ளார். மேலும் இதற்கு பிறகும் சில கேள்விகள் எழுகின்றன. சிம்பு நடிக்கும் படத்தை எடுத்து முடித்து வெளியிட அடுத்த வருடம் ஆகிவிடும். அதற்கு பிறகு வாடிவாசல் எழுதி முடித்து, அதை எடுத்து முடித்து வெளியிட 2027 ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.