தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

ஜீனி படத்தை முடித்துவிட்டு கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வரும் ரவி மோகன், பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையே ப்ரோ கோடு என்ற படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தை கார்த்தி யோகி என்பவர் இயக்கப் போகிறார். அதையடுத்து யோகி பாபுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரித்து, இயக்கப் போகிறார் ரவி மோகன். இந்த படம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பை துவங்குகின்றனர். குடும்ப பொழுதுபோக்கு கதையில் உருவாகும் இந்த படத்தில் ரவி மோகனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.