வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பெரிய நட்சத்திரங்களுடன் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனாலும் அந்த படம் பெரிய தோல்வியை சந்திக்கும். சமீபத்திய படங்களில் தக் லைப், இந்தியன் 2, கேம் சேஞ்ஜர் ஆகிய படங்களை குறிப்பிடலாம். ஆனால் அந்த காலத்தில் இதுபோன்ற தோல்விகள் அபூர்வமாகவே அமையும். அப்படி அமைந்த படங்களில் முக்கியமானது 'மாயமாலை'.
தெலுங்கில் 'திலோத்தமா' என்ற பெயரில் உருவான இந்த படம் தமிழில் 'மாயமாலை' என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியாக படமாக்கப்பட்ட இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் தவிர மற்றவர்கள் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்தார்கள். சோபனாச்சலா பிக்சர்ஸ் பேனரின் கீழ் மிர்சாபூரைச் சேர்ந்த ராஜா சாஹேப் தயாரித்து இயக்கினார்.
இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்தனர். இசையமைத்தவர் பி. ஆதிநாராயண ராவ். தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதினார். இந்திரன் சபை நடன கலைஞரான திலோத்தமை பூமியில் உள்ள மானுடன் ஒருவனை காதலிக்கிற கதை. திலோத்தமயாக அஞ்சலிதேவி நடித்தார். பூலோக வாலிபனாக நாகேஸ்வரரா நடித்தார்.