வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் தயாரிப்பாளரான ஏ.எம். ரத்தினத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கும் படம் 'ஹரிஹர வீரமல்லு'. பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் வில்லனாகவும், முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப்பாகவும் பாபி தியோல் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'சாவா' என்ற இந்தி படத்தில் அவுரங்கசீப் ஒரு சர்வாதிகார மன்னராக சித்தரிக்கப்பட்டார். இதனால் அவுரங்கசீப் மீது கோபமடைந்த மக்கள் அவரது சிலைகளை உடைத்தனர். சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டது.
இந்த நிலையில் 'ஹரிஹர வீர மல்லு' படத்தில் இடம்பெறும் அவுரங்கசீப் கேரக்டரை சற்று மாற்றி அமைத்து அதற்கேற்ப சில காட்சிகளை மீண்டும் படமாக்கி உள்ளார் ஜோதி கிருஷ்ணா. ஆனால் 'அனிமல்' படத்தில் பாபி தியோலின் நடிப்பை பார்த்து அதற்கு ஏற்பவே காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜோதி கிருஷ்ணா கூறியிருப்பதாவது: படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி தியோல் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி தியோல் நடித்த 'அனிமல்' திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தோம்.
'அனிமல்' படத்தில் அளித்த அந்த மவுன நடிப்பு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ஹரிஹர வீரமல்லு படத்திலும் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன்.
இந்த புதிய வடிவமைப்பின் மூலம் அவுரங்கசீப்பின் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கதையின் பின்னணி, உந்துதல், உடல் மொழி என அனைத்தும் பாபி தியோலின் நடிப்பு சக்திக்கு ஏற்ப மறு வடிவம் பெறப்பட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம், பாபி தியோலின் தற்போதைய பான் இந்தியா புகழுக்கும், அவரிடம் இருக்கும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கும் நிச்சயமாக நீதியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.