சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் வசுந்தரா தாஸ். ஆறு வயது முதல் பாடத்தொடங்கியவர் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். பின்னர் தனி ஆல்பங்களில் பாடியவர் தமிழ் திரைப்படங்களில் பாடுவதற்காக சென்னை வந்தார். ஆனால் அவர் பாடுவதற்கான வாய்ப்பை விட நடிப்பதற்காகவே அதிக வாய்ப்புகள் வந்தது. இதனால் நடிக்கவும் அவர் தயாரானார்.
முதன்முதலில் அவர் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றது 'அலைபாயுதே' படத்திற்காக. ஆனால் அந்தப் படத்தில் நடிக்க அவர் தேர்வாகவில்லை. தான் எதிர்பார்க்கும் எளிய தோற்றம் வசுந்தராவிடம் இல்லை என்றும், அவரிடம் ஒரு ரிச் லுக் இருப்பதாகவும் மணிரத்னம் கூறிவிட்டார். அதன் பிறகு அவர் 'ஹேராம்' படத்தில் நடிப்பதற்கு தேர்வானார். காரணம் வடநாட்டு பெண் என்பதால் அந்த தோற்றத்திற்கு அவர் சரியாக இருப்பதாக கமல் கருதி வாய்ப்பளித்தார்.
என்றாலும் ஏ ஆர் ரஹ்மான் அவருக்கு 'முதல்வன்' படத்தில் 'சக்கலக்க பேபி' பாடல் பாடும் வாய்ப்பு அளித்தார். அஜித் நடித்த 'சிட்டிசன்' படத்தில் நடித்த அவர் மற்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்தாலும் நடிகையாக அவர் ஜெயிக்கவில்லை. ஆனால் பாடகியாக நிலை நிறுத்திக் கொண்டார்.