படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பாலிவுட்டில் இருந்து வந்திருக்கும் காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு ஒரே படத்தில் நடித்து விட்டு மூட்டை கட்டிய காஜல் ஒருவரும் இருந்திருக்கிறார்.
1977ம் ஆண்டு வெளியான'ஹம் கிசிசே கம் நஹீன்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் காஜல் கிரண். இந்த படம் சூப்பர் ஹிட். உடனேயே, காஜல் கிரண் பாலிவுட்டில் ஒரு நிலையான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அதன்பிறகு 13 ஆண்டுகளில் 40 படங்களில் நடித்தார்.
ரிஷி கபூருடன் நடித்த 'ஹம் கிசிசே கம் நஹீன்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் அந்த ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த படமாக மாறியது. இதைத் தொடர்ந்து, காஜல் கிரண் பல படங்களில் முன்னணி வேடத்தில் நடித்தார். அவற்றில் ஜிதேந்திராவின் 'மாங் பரோ சஜனா', மிதுன் சக்ரவர்த்தியின் 'வர்தாத்', 'ஹம் சே பட்கர் கவுன்' மற்றும் 'சபூத்' போன்றவை முக்கியமானவை. ஆனால் ஒரு கட்டத்தில் திடீரென சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார்.
தமிழில் 1985ம் ஆண்டு வெளிவந்த 'பந்தம்' படத்தில் நடித்தார். இதில் அவர் சிவாஜியின் மகளாகவும், ஆனந்த் பாபுவின் காதலியாகவும் நடித்தார். மேலும் இந்த படத்தில் ஷாலினி, நிழல்கள் ரவி, ஜெய்சங்கர், மனோரமா, வினு சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கே.விஜயன் இயக்கி இருந்தார்.
இது 'சக்கரயும்மா ' என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பணக்கார தந்தையின் மகள் ஒரு ஏழை வாலிபனை திருமணம் செய்து கொள்வதும், தந்தை பாசத்தால் துடிப்பதும், பின்னர் குடும்பம் ஒன்று சேர்வது மாதிரியான கதை.