வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ள படம் 'பிரீடம்'. 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி உள்ளார். சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளனர். இந்த படத்தின் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் தேர்வானது குறித்து இயக்குனர் சத்யசிவா கூறும்போது
"இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். ஒருவரை நல்லவராகக் காட்ட, சில காட்சிகள் வைக்க வேண்டும். ஆனால் சசிக்குமாரை காட்டினாலே போதும். அதே மாதிரி அப்பாவி, ஏழ்மையானவர் எனும்போது, லிஜோ மோலை காட்டினாலே போதும், தனியாகக் காட்சி வைக்கத் தேவையில்லை.
படத்தின் முதல் ஷெட்யூலில் நாயகி இன்றியே படப்பிடிப்பு நடந்தது, கதைக்கேற்ற நாயகியே தேடிக் கொண்டே இருந்தோம். கடைசியாக லிஜோவை தேர்வு செய்தோம். காரணம் ஜெய்பீமில் அவரது நடிப்பு. அவரை பார்த்த உடனேயே ஒரு அப்பாவி பெண் என்ற நினைப்பு வந்து விடும், அமைதியான அடக்கமான பெண் என்கிற எண்ணம் வந்து விடும் அதற்காகவே அவரை தேர்வு செய்தோம். அவர் மலையாளியாக இருந்தாலும் இலங்கைத் தமிழைக் கற்றுக் கொண்டு பேசியுள்ளார் . லிஜோ வந்த பிறகு இந்தப்படம் வேறு மாதிரியாக இருந்தது" என்றார்.