குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், காயத்ரி, ஐஸ்வர்யா ரகுபதி உட்பட பலர் நடித்த படம் 'மாயக்கூத்து'. ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அந்த கதையில் வரும் கேரக்டர்கள் திடீரென உயிர் பெறுகின்றன. அந்த எழுத்தாளர் வீடு தேடி வருகின்றன. ''எங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றுங்கள், எங்கள் கேரக்டரை இப்படி மாற்றியது ஏன்'' என்று சண்டைபோடுகின்றன. ''அது என் கற்பனை, என் இஷ்டபடிதான் எழுதுவேன்'' என எழுத்தாளர் சொல்ல, அந்த கேரக்டர்களால் எழுத்தாளருக்கு பிரச்னைகள் வருகிறது. அந்த கற்பனை கதை கேரக்டர்கள், எழுத்தாளரை துரத்துகின்றன. அடுத்து என்ன நடக்கிறது என்பது மாயக்கூத்து கதை.
இந்த படத்தில் மறைந்த நடிகர் டில்லிகணேஷ் பத்திரிகை எடிட்டர், பப்ளிஷர் ஆக வருகிறார். இது குறித்து இயக்குனர் கூறுகையில் ''நாங்கள் சின்ன டீம். 25 லட்சத்தில் இந்த படத்தை எடுத்தோம். டில்லி கணேசிடம் தயங்கியபடி பேசினோம். அவரோ, சம்பளத்தை மிக குறைவாக வாங்கிக்கொண்டு எங்களுக்காக நடித்து கொடுத்தார். அவரின் நடிப்பு, டெடிகேசன் பார்த்து மிரண்டு விட்டோம். அதேபோல், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த நாடக ஆசிரியர், எழுத்தாளரான மு.ராமசாமியும் கவுரவ வேடத்தில், எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்துக்கொடுத்தார்.
என் அப்பா மலையாளத்தில் 20 படங்களை இயக்கியவர். அவர் படம் தயாரித்ததால் ஒரு கட்டத்தில் கடனாளி ஆனோம். நான் வேலைக்கு போய் கடனை அடைத்து, அப்பா பாணியில் படம் இயக்கியுள்ளேன். இந்த பட திரைக்கதையும், எடிட்டிங்கும் பலரை கவர்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒரு முழு படம், இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி சாத்தியம் என பலரும் கேட்கிறார்கள்'' என்றார்.