தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமா உலகில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லவே முடியாது. அப்படி ஒரு அதிர்ஷ்டம், இல்லை, இல்லை, பேரதிர்ஷ்டம் கன்னட இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டிக்கு அமைந்தது. 2022ல் சுமார் 15 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்தப் படத்திற்காக ரிஷப் வாங்கிய சம்பளம் வெறும் 4 கோடி என்கிறார்கள்.
ஆனால், தற்போது உருவாகி வரும் 'காந்தாரா' படத்தின் முன் பகுதி படமான 'காந்தாரா சேப்டர் 1' படத்திற்காக ரிஷப் 100 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும், லாபத்திலும் குறிப்பிட்ட சதவீதம் பங்கைக் கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியோடு ஒப்பிடுகையில் இரண்டாம் பாகம் இன்னும் அதிக வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான் அவர் இவ்வளவு சம்பளம் கேட்கிறார் என சாண்டல்வுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தை 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்கள். படத்தின் வியாபாரம் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறதாம்.
பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் 2 கோடி சம்பளம் வாங்கினால் கூடவே ஒரு கோடி கூடுதலாக சம்பளம் கேட்பதுதான் வழக்கம். ரிஷப் கேட்கும் சம்பளத்தைக் கணக்கிட்டால் அது 25 மடங்கு அதிகமாக இருக்கிறது.