பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

பிக்பாஸ் ராஜூ ஹீரோவாக நடிக்கும் 'பன் பட்டர் ஜாம்' படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் பட விழாவில் மேடையில் கண்கலங்கினார். சில இயக்குனர் இப்படி மேடையில் அழுவது, உணர்ச்சிவசப்படுவது அடிக்கடி நடப்பதுதான் என்றாலும், இவர் சொன்ன காரணம் பலரையும் உருக வைத்துள்ளது. அவர் பேசுகையில், ''இதற்கு முன்பு காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தை இயக்கினேன். (கவுசிக்ராம், அஞ்சலிநாயர் நடித்த படம்). நான் இயக்கிய முதல் படத்தை என் குடும்பத்துடன் பார்க்க விரும்பினேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்தது. முதல் பட இயக்குனர் என்பதால் அப்போது என்னிடம் பணமில்லை. என் நண்பர் சினிமாவாலா சதீஷ்தான், அதற்கான பணம் கொடுத்து என் குடும்பத்தினர் படம் பார்க்க ஏற்பாடு செய்தார்.
அடுத்து வந்த காலத்திலும், இந்த படத்திலும் அவ்வளவு உதவி இருக்கிறார். என்னை பற்றி சினிமா உலகில் அவ்வளவு பேரிடம் நல்லவிதமாக சொல்லியிருக்கிறார். நான் படம் பண்ண அவர் அழைத்தார். பல நேரங்களில் உன்னிடம் பணம் இருக்காது, இந்தா வெச்சுக்கோ என 25 ஆயிரம் கொடுத்து உதவுவார்'' என கண்கலங்கினார். ராகவ் பெயர் பின்னால் இருக்கும் மிர்தாத் என்ற பெயர் ஒரு தத்துவ ஞானியின் பெயர். அவர் கருத்துகளால் கவரப்பட்டு இந்த பெயரை வைத்துக்கொண்டாராம். 'பறந்து போ' பட நன்றி அறிவிப்பு விழாவிலும் ஹீரோயின் கிரேஸ் ஆண்டனி, தனது முந்தைய கஷ்டங்கள், அம்மாவை நினைத்து அழுதது குறிப்பிடத்தக்கது.