தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

1950களில் நடந்த கல்லக்குடி போராட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றி கல்லக்குடி என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும் என்று நடந்த போராட்டம். இந்த போராட்டத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது அவரது அரசியல் வாழ்வில் பெரிய திருப்புமுனை.
ஆனால், கல்லக்குடி போராட்டத்திற்கு எம்ஜிஆர் நாடகத்தில் நடித்து நிதி திரட்டிக் கொடுத்தது பலரும் அறியாத ஒன்று. அந்த நாடகத்தின் பெயர் 'இடிந்த கோவில்'. எம்ஜிஆர் நாடக மன்றத்தினர் நடத்திய இந்தத நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
சினிமாவில் ஹீரோவான பிறகு எம்ஜிஆர் நடித்த முதல் நாடகம் இது. 1953ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த இந்த நாடகத்தில் எம்ஜிஆருடன் அவரது அண்ணன் சக்கரபாணி, கே.ஏ.தங்கவேல், முஸ்தபா, நாராயண பிள்ளை, திருப்பதி சாமி, குண்டுமணி உள்பட பலர் நடித்தனர்.
நாடகத்தின் கதையை விஸ்வம் எழுதியிருந்தார். ரவீந்திரன் வசனம் எழுதி இருந்தார். நாடகம் பார்க்க அதிகபட்ச கட்டணம் 5 ரூபாய், குறைந்த கட்டணம் 8 அணா. இரண்டு நாள் நடந்த இந்த நாடகத்தின் வசூலை போராட்ட குழுவிற்கு எம்ஜிஆர் வழங்கினார்.