வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
1990களில் பிசியான ஹீரோவாக இருந்தவர் சரவணன். சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் 'பருத்தி வீரன்' படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக ரீ என்ட்ரி கொடுத்து அதன் பிறகு 'பருத்தி வீரன்' சரவணன் என்றே அழைக்கப்படுகிறார்.
தற்போது வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் அவர் தற்போது 'சட்டமும் நீதியும்' என்ற வெப் தொடரில் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நம்ரிதா நடித்திருக்கிறார். சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார், பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர் வருகிற 18ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
இதுகுறித்து சரவணன் கூறும்போது, "சினிமாவில் 35 ஆண்டுகளை கடந்த எனக்கு, இந்த வெப் தொடர் மீண்டும் கதாநாயகன் அரிதாரம் கொடுத்துள்ளது. ரசிகர்களை ஈர்க்கும்படி எனது பயணம் இருக்கும்'' என்றார்.