முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? | தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? |
மறைந்த ராம.நாராயணன் இயக்கத்தில் சீதா நடிப்பில் 1990ம் ஆண்டு வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் ஆடி வெள்ளி. அந்த படத்தின் சென்டிமென்ட் காட்சிகளும், பாம்பு, யானை சீன்களும் தமிழகத்தில் பேசப்பட்டன. இந்த படத்தை ரீமேக் செய்ய முயற்சிக்கிறார் ராம நாராயணன் மகன் முரளி ராமசாமி. சீதா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அதில் 15 கோடி வரை சம்பளம் கேட்டதாலும், மூக்குத்திஅம்மன் 2 படத்தில் பிஸி ஆனதாலும் அவரை நடிக்க வைக்கவில்லை.
இப்போது திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அம்மன் கதையில் நடிக்க வேண்டும் என அவரும் ஆர்வமாக இருக்கிறாராம். இயக்குனர் தேர்வும் நடந்து வருகிறது. திரிஷா ஓகே சொல்லும் பட்சத்தில் வரும் ஆடி வெள்ளியில் இந்த பட அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. மூக்குத்தி அம்மன் 2வில் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சித்தார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால், அது நடக்கவில்லை. கடைசியில் அந்த படம் சுந்தர்.சி இயக்க, நயன்தாரா நடிப்பில் தயாராகிறது. ஆகவே, இந்த பட வாய்ப்பை விட்டு விடக்கூடாது. நயன்தாரா மாதிரி தானும் பக்தி படத்தில் நடிக்கவே வேண்டும் என்று திரிஷா விரும்புகிறாராம். ஆடி வெள்ளி ரீமேக்கிலும் யானை முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளதாம்.