தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

டி.வியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த நயன்தாரா 2003ம் ஆண்டு 'மனசிலக்கரே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தார். அதன்பிறகு சில மலையாள படங்களில் நடித்திருந்த நிலையில்தான் இயக்குனர் ஹரி தனது 'ஐயா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். அதில் அவர் சரத்குமார் ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு 'சந்திரமுகி' படத்தில் அவர் நடித்தது பெரிய கேரக்டர் இல்லை என்றாலும் ரஜினி ஜோடி என்பது அவரது பலமாக இருந்தது. பிறகு நடித்த 'கஜினி' படம் அவருக்கு பெரிதாக உதவவில்லை. சாதாராண மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்தார்.
இனி இப்படியோ போனால் வேலைக்கு ஆகாது என்று நயன்தாரா கவர்ச்சியாக நடிக்க துணிந்தார். இதன் முதல் கட்டமாக 'சிவகாசி' படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடினார். அடுத்து அவர் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'கள்வனின் காதலி' படத்தின் மூலம்தான் முழுமையான கவர்ச்சிக்கு மாறினார். இந்த படத்தின் இயக்குனர் தமிழ்வண்ணன் என்றாலும், இது எஸ்.ஜே.சூர்யா படமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், நயன்தாராவும் ஒரே பேண்டை அணிந்து நின்ற காட்சி பெரிய பேனர்களாக வைக்கப்பட்டு படத்திற்கு பரபரப்பு கூட்டினர். பின்னர் படத்தில் நயன்தாராவும், எஸ்.ஜே.சூர்யாவும் நெருக்கமாக நடித்த காட்சிகள் பரபரப்பாகின. இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நயன்தாரா கேரியரில் முக்கியமான படமானது.
தற்போது இந்த படத்தை நவீன தொழில் நுட்பத்தில் ரீ ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.