வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. தமிழகத்தில் மட்டும் 150 கோடி வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்ததாகச் சொன்னார்கள். ஆனால், மொத்தமாக பட்ஜெட்டுடன் சேர்த்து கணக்கிட்டால் குறைந்த நஷ்டம் என்றும், குறைந்த லாபம் என்றும் தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகத்திலும் மாறி மாறி சொல்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத் தயாரிப்பின் மூலம் தமிழில் நுழைந்தது. ஒரு தமிழ்ப் படத் தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது. அதன்பின் என்ன நடந்ததோ தயாரிப்பு நிறுவனம் மாறியது.
அஜித் - மைத்ரி நிறுவனம் மீண்டும் அடுத்த படத்தில் இணையப் போகிறார்கள் என்றுதான் தகவல்கள் வெளியாகின. ஆனால், படம் வெளியாகி மூன்று மாதங்கள் ஆன பிறகும் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. அஜித்தின் அடுத்த படத்தை மைத்ரி நிறுவனம் தயாரிக்கப் போவதில்லை என்றுதான் சொல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த லாபம் வராத காரணத்தால் இந்த முடிவாம். அதனால், தமிழில் உள்ள சில முன்னணி நிறுவனங்களுடன் அஜித் தரப்பில் பேசி வருகிறார்களாம். அவர்கள் கேட்கும் சம்பளம் 200 கோடிக்கும் அதிகம் என்கிறது கோலிவுட் கிசுகிசு. இதனால்தான் அடுத்த பட அறிவிப்பு தள்ளிப் போகிறதாம்.